நாச்சியார்கோயில் அருகே வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் கொடூரமாக வெட்டி கொலை!-போலிசார் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவாத்தான்கட்டளை கிராமம், குப்பாங்குளம், கிளாரட் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவருடைய மகன் வழக்கறிஞர் காமராஜ் (வயது 45), பக்கிரிசாமி என்பவருடைய மகன் சக்திவேல் (வயது 45) ஆகிய இருவரையும், நேற்று (19-10-2020) இரவு சுமார் 8.00 மணியளவில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்கோயில் காவல் நிலைய போலிசார், மேற்கண்ட இரு நபர்களின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோயில் காவல் நிலைய போலிசார் வழக்கு (குற்ற எண்:1320/2020) பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது; இதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கிடையே இருந்து வந்த இடம் பிரச்சனை முன் விரோதம் காரணமாக, இந்த படுகொலை நடந்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 20, 2020 3:30 pm

Leave a Reply