ஏற்காட்டிற்கு மீண்டும் பேருந்து இயக்கம் துவங்கியது!-பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தலம் என்பதால், ஜூன் மாதம் பேருந்துகள் இயக்கப்பட்டு பின்னர் மூன்று நாட்களில் நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும், சுற்றுலா தலங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஏற்காட்டிற்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், மக்கள் பெரும் சிரமமப்படுவதால், ஏற்காட்டிற்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சியினரும், தோட்ட தொழிலாளர் சங்கங்களும் கோரிக்கையும், மறியல் போராட்ட அறிவிப்பும் வெளியிட்டிருந்தனர். மாவட்ட கவுன்சிலர் புஷ்பராணி இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.

இந்நிலையில், இன்று சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மூன்று அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் மலைக்கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

120 நாட்களுக்கு பின்னர் ஏற்காட்டிற்கு பேருந்துகள் இயக்கியிருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நே.நவீன் குமார்.

Leave a Reply