விவசாயிகளின் உரிமைக்காக சத்தியாகிரக அறவழிப் போராட்டம்!-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துக்கொண்டார்.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இன்று (31.10.2020) காலை 11 மணியளவில், திருச்சி- சமயபுரம் செல்லும் சாலையில் நெ1 டோல்கேட் ரவுண்டாணா அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் விவசாயிகளின் உரிமைக்காக சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். முன்னதாக கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கட்சிக் கொடியினை ஏற்றினார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
UTL MEDIA TEAM

Leave a Reply