பட்டாசு, இனிப்பு மற்றும் பிற பரிசுப்பொருட்களை வழங்குவதும் லஞ்சம்தான்!-நீதிமன்ற பணியாளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கவேண்டாம்! -காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன் அனுப்பியுள்ள அதிரடி அறிக்கை.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி என். லோகேஸ்வரன்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நீதிமன்ற ஊழியர்களுக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் எந்த வகையான பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாகக் கொடுக்காதீர்கள் என்று, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி என். லோகேஸ்வரன் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போது காவல்துறையினர், நீதிமன்ற பணியாளர்களுக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது நடைமுறையில் இருப்பதாக நான் அறிகிறேன். அவ்வாறு வழங்குவதும் லஞ்சம் என லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளில் உள்ளது. எனவே, மாவட்ட காவல்துறையினர் இனி அவ்வாறு பரிசுப்பொருட்கள் வழங்கவேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி என்.லோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply