நேற்று வரை மக்கள் பணியாற்றிவர் இன்று மருத்துவமனையில் அனுமதி! -ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதைக்கு என்னானது?!

ஆலங்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூங்கோதை நேற்று (18.11.2020) மாலை 3.30 மணிக்கு, தொகுதி மக்கள் பிரச்சனைக் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.சமீரானிடம் கோரிக்கை மனுக்கொடுத்தபோது.

நேற்று (18.11.2020) மாலை வரை மக்கள் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளுமான டாக்டர் பூங்கோதை, இன்று (19.11.2020) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் இந்த திடீர் உடல் நலக்குறைவுக்கு காரணம் என்ன?! என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் அவர் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத நிலையில், ஒரு சில அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

உண்மை தன்மையைத் தெரிந்துக் கொள்வதற்காக டாக்டர் பூங்கோதையின் அலைபேசி மற்றும் தொலைபேசி எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால், எதிர் முனையில் யாரும் எடுக்கவில்லை.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN November 20, 2020 3:04 pm

Leave a Reply