மிதி வண்டியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!-திருச்சி அரியமங்கலம் அருகே நடந்த சோகம்.

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரியமங்கலம் மேம்பாலம் அருகில் இன்று (23.11.2020) காலை 9.45 மணியளவில் மிதி வண்டியில் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார். இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயங்கி விழுந்து மரணமடைந்தவர் பெயர் சண்முகம், இவர் கீழக்கொண்டையம் பேட்டையை சேர்ந்தவர் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply