வேளாங்கண்ணி பேராலயத்தில் பிராத்தனை! -நாகூர் தர்காவில் தொழுகை!-இன்னலற்ற இன்ப வாழ்வு மக்களுக்கு கிடைக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பிராத்தனை.

புயல் மற்றும் தொடர் கனமழையால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதல் சொல்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, அப்படியே வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு சென்று பிராத்தனையில் ஈடுப்பட்டார். மேலும், நாகூர் ஆண்டவர் தர்காவில் தொழுகையிலும் ஈடுப்பட்டார். மக்களுக்கு நோய் தீர்ந்து, பேரிடர் அனைத்தும் அகன்று, பாடுபடும் விவசாயி, உழைப்பாளி வாழ்வு உயர்ந்து, இன்னலற்ற இன்ப வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டு என் பயணத்தைத் தொடர்கின்றேன் என்று முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

-சி.கார்த்திகேயன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply