டேங்கர் லாரி மோதியதில் எச்ஏபிபி தொழிற்சாலைக்கு செல்லும் குடிநீர் பைப் உடைந்தது! -திருவெறும்பூர் மஞ்சத்திடல் அருகே நடந்த விபரீதம்.

லாரி ஓட்டுநர் வெங்கடேசன்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து இந்தியன் ஆயில் டேங்கர் லாரி மோதியதில் எச்பிபி தொழிற்சாலைக்கு செல்லும் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாக கொட்டுகிறது.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலம் உள்ளது. மத்திய படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான எச்ஏபிபி தொழிற்சாலைக்கு குடிநீர் செல்கிறது. இந்நிலையில் திருச்சியிலிருந்து துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கிடங்கிற்கு  பெட்ரோல் டீசல் நிரப்புவதற்காக இன்று காலை டேங்கர் லாரி வந்துள்ளது. அதனை வெங்கடேசன் (வயது 37) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், காலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் மஞ்சத்திடல் பாலம் அருகே வரும்போது லாரியை கட்டுப்பாடில்லாமல் அந்த பகுதியில் உள்ள ரைஸ்மில் காம்பவுண்ட் சுவரில் மோதி  சென்ற லாரி மஞ்சத்தில் திடல் பாலம் உய்ய கொண்டான் வாய்க்கால் அருகே எச்பிபி தொழிற்சாலைக்கு செல்லும் குடிநீர் பைப் லைன் மீது மோதி நின்றது.

இதில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு குடி தண்ணீர் வீணாகிறது. இதில் ரைஸ்மில் காம்பவுண்ட் சுவரும் இடிந்து விழுந்தது.

எச்பிபி குடிநீர் பைப் லைன் மீது லாரி மோதவில்லையென்றால், லாரி உய்யக்கொண்டான் வாய்க்கால் உள்ளே பாய்ந்திருக்கும். நல்லவேளை அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் வெங்கடேசன் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் இந்த விபத்துக் குறித்து லாரி டிரைவர் வெங்கடேசனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply