ஏற்காடு ஏரியில் ஆண் சடலம் மீட்பு!

சேலம் மாவட்டம், ஏற்காட்டின் பிரதான சுற்றுலா தலமான படகு ஏரியில் இன்று அதிகாலை ஆண் சடலம் ஒன்று மிதந்துக் கொண்டிருந்துள்ளது. படகு நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர், ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர்.

பின்னர் அது ஒண்டிகடை பகுதியை சேர்ந்த குப்பன் மகன் சேகர் என்பதும் தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்படவர் ஆவார். மேலும் ஏரிக்கரையில் சேகரின் சட்டை, லுங்கி மற்றும் செருப்பு இருந்ததால், ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் சேகரின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply