60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகம் மிகப் பெரிய மாற்றத்திற்கு உட்படும்!-அர்ஜூன மூர்த்தி தகவல்.

செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன மூர்த்தி.

புதிய அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் அர்ஜூன மூர்த்தி, இன்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறேன். எனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் முற்றிலும் பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும். ரஜினியின் படத்தையோ, ரஜினி சொன்ன வார்த்தைகளையோ என் கட்சியில் பயன்படுத்த மாட்டேன். ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகம் மிகப் பெரிய மாற்றத்திற்கு உட்படும் என்றும், அந்த நேரம் தான் இந்த நேரம் என்றும் அர்ஜூன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply