நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

தேமுதிக கட்சியின் 21-ம் ஆண்டு கொடி அறிமுக நாளை முன்னிட்டு, தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 12 ) நடைப்பெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில், தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கலந்துக்கொண்டார். ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அவர் உரையாற்ற முயற்சித்தார். ஆனால், பாவம் அவரால் பேசமுடியவில்லை.

பல ஆண்டு காலமாக சினிமாவிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலிலும் மற்றும் சட்டசபையிலும் கம்பீரமாக “கர்ஜனை” செய்து வந்த நடிகர் விஜயகாந்த், தற்போது பேச நினைத்தும்; பேசமுடியாமல் தவிப்பதை நினைத்து அங்கு கூடியிருந்தவர்களில் பலர் கண் கலங்கினர். ‘எப்படி இருந்த மனிதன் ; இப்படி ஆகிவிட்டாரே?!’ என்று அவர்கள் பாசத்தோடு புலம்பிதை அங்குக் கண்கூடாக பார்க்க முடிந்தது.

வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதர் விஜயகாந்த்!- தை, அவரது அரசியல் எதிரிகள்கூட நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

-கே.பி.சுகுமார், எஸ்.திவ்யா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply