அச்சன்குளம் பட்டாசு ஆலை தீ விபத்தில் இன்று (12.02.2021) இரவு 10.25 மணி நிலவரப்படி 17 பேர் பலி!-35 பேர் காயம்!

விருதுநகர் மாவட்டம், அச்சன்குளம் பட்டாசு ஆலை தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், முதலமைச்சர் உள்பட, அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சற்று முன் பேசினோம். இன்று (12.02.2021) இரவு 10.25 மணி நிலவரப்படி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 17 -ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 -ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுப்போன்ற துயரம் இந்தியாவில் இன்றோடு இறுதியாக இருக்க வேண்டும்!- தீபெட்டி மற்றும் பாட்டாசு ஆலையில் பணியாற்றும் ஏழை மக்களின் உயிரை காப்பாற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

pn120221_34

-சி.கார்த்திகேயன்.

One Response

  1. MANIMARAN February 13, 2021 5:29 pm

Leave a Reply