94 வயது முன்னாள் இந்திய கடற்படை வீரர் திருச்சியில் காலமானார்!

முன்னாள் இந்திய கடற்படை வீரர் ஆரோக்கியசாமி.

இரண்டாம் உலக போர் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த அந்த காலக் கட்டத்தில், திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்ற இளைஞர், துணிச்சலுடன் இந்திய கடற்படையில் இணைந்து தாய் நாட்டை காக்கும் பணியில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டார்.

சுமார் 35 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றி, 1974 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு முன்னாள் படை வீரர்களின் சங்க தலைவராக இருந்து, படை வீரர்களின் நலனுக்காக பல ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இது மட்டுமின்றி பல சமூக அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்பில் இருந்து பல்வேறு பொது நல சேவைகளை செய்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக ஓய்வில் இருந்து வந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர் ஆரோக்கியசாமி, முதுமையின் காரணமாக 21.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் காலமானார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply