திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கால்வாயில் உருண்டு விபத்துக்குள்ளானது!

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (25.02.2021) மாலை 04.35 மணியளவில் பழைய பால் பண்ணைக்கும் – சஞ்சீவி நகருக்கும் இடையில் சென்று கொண்டு இருந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்த நபர்கள் காரில் இருந்த நபர்களை மீட்டு காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த நபர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

படங்கள் :இரா.வினோத்.

Leave a Reply