சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம்!-அர்ஜுன மூர்த்தி தலைமையில் ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’!-நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

அர்ஜுன மூர்த்தி.

File Photo.

அர்ஜுன மூர்த்தி தலைமையில் இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த ஜோதிடரும், புரோகிதருமான பொன்னுதுரை த/பெ.பெருமாள் என்பவரால் 2012 -ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகும்.

இதுப்பற்றி இன்று (27.02.2021) மாலை 05.50 மணியளவில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனர் பெ.பொன்னுதுரையிடம் பேசினோம்.

இந்த உண்மையை அவர் மறுக்கவில்லை. ஆம், ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனர் நான்தான்; அர்ஜுன மூர்த்தி தலைமையில் இக்கட்சி இனி தொடர்ந்து செயல்படும் என்றார்.

புதிதாக அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்பதால், ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’யை, தனது தலைமையின் கீழ் அர்ஜுன மூர்த்தி கொண்டு வந்துள்ளார். இதில் தவறொன்றும் இல்லை.

தற்போது அர்ஜுன மூர்த்தி அறிவித்திருக்கும் செயல் திட்டங்கள் உண்மையிலுமே சிறப்பாக உள்ளது. இவையனைத்தும் செயல் வடிவம் பெற நாமும் வாழ்த்துவோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply