100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தினர் கார் பேரணி!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தினர் வாக்காளர் விழிப்புணர்வு கார் பேரணி மேற்கொண்டனர்.

குமாரபாளையம் மற்றும் ஏற்காடு ரோட்டரி சங்கத்தினரின் கார் பேரணியை, ஏற்காடு தேர்தல் அலுவலர் கோவிந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஏற்காடு அண்ணா பூங்காவில் துவங்கிய பேரணி, பஸ்நிலையம், கடைவீதி, காந்தி பூங்கா, காவல்நிலையம், லாங்கில் பேட்டை, ஜெரினாக்காடு, எம்.ஜி.ஆர்.நகர், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து பேரணி மீண்டு அண்ணா பூங்காவில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 50-க்கும் மேற்பட்ட கார்களில் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply