திருச்சி அரியமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி படுகொலை!- முள்புதருக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!-கொலையாளிகளை தேடும் பணித் தீவிரம்.

படுகொலை செய்யப்பட்ட சிலம்பரசன்.

திருச்சி, அரியமங்கலம், திடீர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி என்ற பன்றி பெரியசாமி, இவரது மறைவிற்கு பிறகு இவரது தம்பி கேபிள் சேகர் பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் தொழிலை நடத்தி வந்தார்.

இந்நிலையில், கேபிள் சேகரை, முன்விரோதம் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி காலை அவரது வீட்டின் அருகே படுகொலை செய்தனர். இவ்வழக்கில் அவரது அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்ளிட்ட 11 பேரை, அப்போது காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் சித்தப்பன் குடும்பத்தினருக்கும், பெரியப்பன் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று (14.03.2021) இரவு 11 மணியளவில் பெரியசாமி மகன் சிலம்பரசன் (வயது35) என்பவரை, அவரது வீட்டின் அருகே உள்ள முள்புதரில் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் காவல்துறையினர், சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு (200 / 2021) பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

படங்கள்: -ஆர்.சிராசுதீன்.

Leave a Reply