தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கும் அதிகாரிகள்..!-திருவிழா மற்றும் மதக் கூட்டங்களுக்கு தடை!-கொரோனா தடுப்பு மற்றும் கட்டுபாட்டு விதிமுறைகள்!-முழு விபரம்.

மாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப்போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள். மாட்டைக் கட்டிப்போட வேண்டுமென்றால், தும்பைத்தான் பலமாகப் பிடிக்க வேண்டுமே தவிர, அதன் வாலை அல்ல. வாலைப் பிடித்தால் என்னவாகும்? மாடு மிரண்டு ஓடிவிடும்; அதாவது, காரியம் கெட்டுவிடும்.

ஆம், ‘தும்பை விட்டு விட்டு வாலை பிடித்த கதையாகதான் இருக்கிறது கொரோனா தடுப்பு மற்றும் கட்டுபாட்டு விதிமுறைகள்.

ஓட்டுக்காக ஆளும் கட்சி, எதிர்கட்சி, இதரக் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பிரசாரத்தின் போதும்; அவர்கள் நடத்திய பொதுக் கூட்டத்தின் போதும்; ஆயிரக்கணக்கான; லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை முக கவசம் அணியாமலும், சமூக இடவெளியை கடைப்பிடிக்காமலும், வாகனங்களில் அழைத்துச் சென்று ஒரே இடத்தில் தேனீக்களைப் போல அடைத்து வைத்தபோது; இந்த பேரிடர் மேலாண்மை எங்கே போனது?!

இன்று ஆட்சித் தலைவராகவும்; வருவாய்த்துறை (DRO / RDO/ Tahsildar) அதிகாரிகளாகவும் இருப்பவர்கள்தானே; இரு தினங்களுக்கு முன்புவரை தேர்தல் அதிகாரியாகவும் இருந்தார்கள்?! இப்போதும் இருக்கிறார்கள்! அப்போது கை கட்டி; வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்து விட்டு, தேர்தல் முடிந்தவுடன் இன்று கட்டுபாடுகளை விதிப்பது கேலிகூத்தாக இருக்கிறது. அரசியல்வாதிகள் என்றால் அவ்வளவு பயம் அப்படிதானே?! அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்; அப்பாவி பொது மக்களுக்கு ஒரு சட்டமா?!

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

5_6303248369582080702

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/04/03/55555/

One Response

  1. MANIMARAN April 9, 2021 4:42 pm

Leave a Reply