திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மரம் தீ பற்றி எரிந்தது!

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில், சாலை ஓரத்தில் மொட்டையாக இருந்த பழமையான இலவம் மரத்தில், இன்று (10.04.2021) காலை 9:30 மணியளவில் திடீரெனத் தீ பற்றி எரிந்தது. அருகில் குடியிருந்து (வசித்து) வந்த நபர்கள், உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள், தீயை முழுமையாக அணைத்தனர்.

இலவம் மரத்திற்கு கீழே கிடந்த குப்பைகள் மீது யாரோ ஒருவர் சிகரெட் துண்டை அணைக்காமல் வீசியெறிந்ததால், இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று, அருகில் குடியிருந்து வரும் நபர்கள் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் உடனே வந்ததால் அருகில் இருந்த வீடுகள் தப்பித்த. இல்லையென்றால் பாதிப்பு அதிகரித்து இருக்கும்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply