‘யாஸ்-(Yaas)’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! -நீலகிரி மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ‘யாஸ் (Yaas)’ புயலாக வலுப்பெற்றுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, நீலகிரி மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு 6 குழுவைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளனர்.

இதுசம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திரமோதி இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/05/22/57163/

Leave a Reply