தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவின் விபரம் பின்வருமாறு :

1.ஆயுதப்படை போலீஸ் (சென்னை) ஐஜிபி-யாக பதவி வகிக்கும் ஜெ.லோகநாதன், சென்னை காவல் ஆணையரக தலைமையிட கூடுதல் ஆணையராக நியமனம்

2.சென்னை மாநகர தலைமையிட கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி மாற்றப்பட்டு, தமிழக காவல்துறை தலைமையிட ஐஜிபியாக நியமனம்

3.நெல்லை நகர சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளியின் முதல்வராக நியமனம்

4.தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ் குமார், நெல்லை நகர சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்

5.தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளியின் முதல்வராக இருந்த எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக நியமனம்”.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply