‘காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பதுடன், திருமணம் மற்றும் பிறந்த நாளிலும் விடுமுறை வழங்க வேண்டும்’ என, காவல்துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காக்க ஏதுவாகவும், அவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கும், வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கும், மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மேலும், காவலர்கள் பிறந்த நாள், திருமண நாட்களில், அவர்களின் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ, அந்த இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும். தமிழக காவல் துறையின் சார்பில், காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி, மாவட்ட மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்பந்தப்பட்ட காவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தவறாமல் செயல்படுத்த வேண்டும்.
மேலும், இந்த சுற்றறிக்கை கிடைத்தது பற்றி காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
Great……superb affairmation…