திருச்சி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு;-21-வது வார்டில் சேதமடைந்த கட்டிடத்தால் அருகில் வசிக்கும் நபர்களுக்கு ஆபத்து!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு எல்லைக்குடபட்ட 21-வது வார்டு வரகநேரி நடுத்தெருவில் கதவு எண் 102 A என்ற தனியாருக்கு சொந்தமான கட்டிடம், நீண்ட காலமாக மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எப்போது வேண்டுமானாலும் அந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்தக் கட்டிடத்திற்கு அருகில் வசிக்கும் நபர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சேதமடைந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் வேறு ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த அந்த கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply