திருச்சி அருகே புளிய மரம் வேரோடு சாய்ந்தது!-ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,அல்லூர் அருகே திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் இன்று (27.11.2021) காலை சுமார் 8:35 மணி அளவில் சாலை ஓரத்தில் இருந்த பழங்கால புளியமரம் ஒன்று வேரோடும்; வேரடி மண்ணோடும் சாலையில் விழுந்தது. இதனால் திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் இல்லை.

-கே.பி.சுகுமார்.,B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply