திருச்சியில் வெள்ளப்பெருக்கு!-பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட 90 பேரை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டனர்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் திருச்சியில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

திருச்சியில் லிங்க நகர் சண்முகா நகர், செல்வா நகர் அரவிந்தா நகர், ராஜலெட்சுமி நகர், சந்தோஷ் நகர் ,சீதாலெட்சுமி நகர், வின் அன்பு அவன்யு மற்றும் மங்கள நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய 41 பெண்களையும், 25 ஆண்களையும், 24 குழந்தைகளையும் மற்றும் 4 நாய்களையும் படகுகள் மூலம் தீயணைப்பு துறையினர் இன்று (27.11.2021) பத்திரமாக மீட்டனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply