செமஸ்டர் தேர்வு முடிவில் குளறுபடி!-மாணவர்கள் பெயருக்கு பதிலாக ”ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா” என்று பதிவாகி உள்ளது!-விரக்தியில் இருக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள்!

Dr. A. S. KRISHNAMOORTHY
Registrar & Acting Vice-Chancellor
TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY

செமஸ்டர் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடியால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் விரக்தியில் உள்ளனர். தேர்வு முடிவு தாளில் சிலவற்றில் மாணவர்கள் பெயருக்கு பதிலாக ”ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா” என்று பதிவாகி உள்ளது என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல்கலை வளாகத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்த செய்முறை தேர்வுகளின் விடைத் தாள்களும் திருத்தப்படாமல், தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வு முடிவை வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் மறுபரிசீலனை செய்யவில்லையென்றால்; எங்கள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள். இந்நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.

இதுக்குறித்து உரிய விளக்கம் பெறுவதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளரும்; தற்போதைய துணைவேந்தருமான டாக்டர் A.S. கிருஷ்ணமூர்த்தியின் தொலைபேசிக்கு நாம் பலமுறை முயற்சித்தோம். தொலைபேசியில் மணி அடித்துக் கொண்டே இருந்ததே தவிர; தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. நீண்ட முயற்சிக்கும்; தேடுதலுக்கும் பிறகு அவருடைய அலைபேசிக்கு நாம் பலமுறை முயற்சித்தோம்.. ஆனால், இந்த செய்தி பதிவேற்றம் செய்யும்வரை அவரது அலைபேசி ”சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா மற்றும் ஓமிக்ரோன் போன்ற கொடிய நோய்தொற்று பரவிவரும் இப்பேரிடர் காலத்தில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்படுவது நோய்தொற்று பரவலுக்கு மிகப் பெரிய வழி வகுத்துவிடும்.. எனவே, கல்வி முக்கியம்தான்; ஆனால், அதைவிட அவர்கள் உயிர் மிக முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போர்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail :
editorutlmedia@gmail.com

Leave a Reply