மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய வரலாற்றில் இணையில்லா தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில், எனது இல்லத்திலும், அம்மா அவர்கள் நீடுதுயில் கொள்ளும் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி, கழகத்தை அரண் போல் காத்து நின்ற அம்மாவின் வழி நடக்க உறுதிமொழி ஏற்றோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply