மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் மீட்பு!-திருச்சி பாரத மிகுமின் நிறுவன (BHEL) வளாக பூங்காவில் நடந்த விபரீதம்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகு மின் நிறுவன (BHEL) வளாக பூங்காவில், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் இருப்பதாக இன்று (07.12.2021) காலை 8:15 மணிக்கு காவல்துறைக்கு வந்த தகவலை, அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாய்லர் பிளாண்ட் காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூற் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரத்தில் தொங்கிய நபர் யார்? எந்த ஊர்? எதற்காக அவர் இங்கு வந்தார்? என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. இது குறித்து பாய்லர் பிளாண்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு  (Crime No: 231/2021) செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்
UTL MEDIA TEAM

Leave a Reply