கான்கிரீட் சிமெண்ட் தொட்டிக்குள் கழுத்தை விட்டு சிக்கிக் கொண்ட மாடு!-உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்.

திருச்சி, கொட்டப்பட்டு, இந்திரா நகரில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தும் கான்கிரீட் சிமெண்ட் தொட்டியை, அப்பகுதி மக்கள் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த கான்கிரீட் சிமெண்ட் தொட்டிக்குள் கழுத்தை விட்டு குப்பைகளை தின்பதற்கு முயற்சித்த மாடு ஒன்று, தலையை வெளியே எடுக்க முடியாமல் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டது.

இத்தகவல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கான்கிரீட் கட் செய்யும் உபகரணத்தை பயன்படுத்தி, அந்தக் கான்கிரீட் தொட்டியை சிறிது வெட்டி எடுத்து, அந்த மாட்டை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply