திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள ஒரு பலகாரக் கடையில் இன்று (23.12.2021) காலை 6:30 மணியளவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. இதில் 6 கடைகள் சேதமடைந்தன.
கேஸ் சிலிண்டர் வெடித்த சப்தம் கேட்டு அருகிலிருந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இச்செய்தியை நாம் பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக, இந்த தீ விபத்து சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்துகொள்வதற்காக; இன்று (23.12.2021) முற்பகல் 11.10 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளரை நாம் தொடர்புகொண்டோம்.
இதுசம்மந்தமாக இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com