தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னையில், திருவெற்றியூர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 24 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இன்று (27.12.2021) காலை அடியோடு இடிந்து விழுந்தது. இதனால் குடியிருப்புவாசிகளின் உடமைகள் அனைத்தும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தது.
இந்நிலையில், வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு மாற்று வீடுகள் மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-கே.பி.சுகுமார்.,B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com