சூட்கேசில் பெண் சடலம்!-போலீசார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லி காளிபாளையம் என்ற பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் கிடந்த சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்கடையில் அனாதையாக கிடந்த சூட்கேசை கைப்பற்றி இன்று காலை திறந்து பார்த்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக இருப்பதை கண்டு, அப்படியே அந்த சூட்கேசை ஆம்புலன்ஸில் ஏற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், நல்லூர் காவல் நிலைய போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply