ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலை நேரத்தில் மருத்துவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்!-முழு விபரம்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வரும் பிரபல மருத்துவர் சக்திவேல் (52) த.பெ செண்ணியப்ப கவுண்டர் என்பவர் நாகனம்பட்டி புறவழிச்சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் மருத்துவர் சக்திவேல் அவருடைய மனைவி ராணி, மருத்துவர் சக்திவேலின் தகப்பனார் மற்றும் தாயார் தேவநாயகம் உள்ளிட்ட நான்கு நபர்களையும் கொள்ளையர்கள் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு வீட்டிலிருந்த 150 பவுன் தங்க நகைகளையும், வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த “இன்னோவா” கார் ஒன்றையும் திருடிச் சென்றனர்.

அதன் பின்னர் இதுகுறித்து மருத்துவர் சக்திவேல் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் .ஆர். சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்ததுடன், தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே பிரபல மருத்துவரின் வீட்டில் கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply