திருச்சி சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது லாரி மோதியது!-லாரியை தேடும் பணியில் போலிசார் தீவிரம்.

திருச்சி- சென்னை பைபாஸ் காவிரி பாலம். சஞ்சீவி நகர்,  ஏ. ஆர்.கே. நகர் அருகே இன்று (17/02/2022) காலை சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கட்டட பணிக்காக சென்ற கூலி தொழிலாளி திருச்சி சிந்தாமணியை சேர்ந்த பார்வதி என்ற பெண் மீது, லாரி ஒன்று மோதி நிற்காமல் சென்று விட்டது.

இந்நிலையில் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு நாம் அனுப்பி வைத்தோம்.

அந்தப் பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தவர் பெயர் சரவணன் என்று தெரியவருகிறது.

அந்தப் பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி திண்டுக்கல் அல்லது மதுரை அல்லது புதுக்கோட்டை சாலை வழியாகத்தான் தப்பி சென்று இருக்கக்கூடும். திருச்சி மாவட்ட எல்லையை தாண்டி இருக்க வாய்ப்பில்லை. அந்த இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் சுங்க சாவடிகளை எச்சரிக்கை செய்து கடந்து சென்ற லாரிகளின் பதிவு எண்களை பார்வையிட்டால், விபத்து ஏற்படுத்திய லாரியையும், அந்த லாரி ஓட்டுனரையும் நிச்சயம் பிடித்து விடலாம் என்று, திருச்சி மாநகர காவல்துறைக்கு வாட்சப் மூலம் நாம் தகவல் தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாநகர காவல்துறை உறுதியளித்துள்ளது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply