நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!-வாக்கு சாவடிக்கு படுத்தப்படுக்கையாக ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட மூதாட்டி!-முழு விபரம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (19/02/2022) காலை 7: 00 மணிக்கு துவங்கியது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 31-வது வார்டுக்கு உட்பட திருமலைசாமி புரத்தில் வசித்து வருபவர் அம்சா; இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இவரை த்தேர்தலில் வாக்களிக்க அவது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். பின்னர் அவரால் நடந்து செல்ல இயலாது என்பதால், ஸ்டெக்சர் மூலம் வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் தெரிவித்த சின்னத்திற்கு வாக்களித்தர்.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply