பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

பிரபல ரவுடி நீராவி முருகன்.

பிரபல ரவுடி நீராவி முருகன்

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் பிரபல ரவுடி. நீராவி முருகன் (வயது 48). இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், நாங்குநேரி காவல் உட்கோட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாரின் என்கவுன்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.

இதுக்குறித்து விரிவான தகவல்களை பெறுவதற்காக, களக்காடு காவல் நிலைய ஆய்வாளரையும் மற்றும் நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தையும் நாம் தொடர்புகொண்டோம்.

இதுகுறித்த விசாரணைக்காக நான் சென்று கொண்டு இருக்கின்றேன். பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் நம்மிடம் தெரிவித்தார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply