காவிரி ஆற்றில் கர்நாடகா மேகதாட்டு அணை நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஒத்திவைப்புத் தீர்மானம்.

“தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என காவிரி தீர்ப்பாயமும் உச்சநீதிமன்றமும் ஆணை பிறப்பித்திருக்கிற நிலையில் கர்நாடக அரசு அந்த ஆணையை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியுள்ளது, ஒன்றிய அரசும் இதனை ஊக்கப்படுத்துகிறது. இது வெளிப்படையாக தமிழக மக்களுக்கு இழைக்கபடுகிற துரோகம். நாடாளுமன்றத்தில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும்” என கோரி விசிக சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

–கே.பி.சுகுமார்

Leave a Reply