குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2022 ஆம் ஆண்டுக்கான 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன், 54 பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்குகிறார்.

பத்ம விபூஷன் விருது பெறுபவர்கள்: ராதே ஷியாம், ஜென்ரல் பிபின் ராவத் (மறைவுக்கு பிறகு).

பத்ம பூஷன் விருது பெறுபவர்கள்: குலாம் நபி ஆஸாத், குருமித் பாவா (மறைவுக்கு பிறகு), சந்திரசேகரன், தேவேந்திர ஜஜாரியா, ரஷித் கான், திரு ராஜீவ் மெஹ்ரிஷி, டாக்டர் சைரஸ் பூனாவாலா, சச்சினாந்த சுவாமி.

கலை, சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை, மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

எம்.பிரபாகரன்

Leave a Reply