விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை குறித்த காலத்திற்கு 9 நாள் முன்னதாகவே அடைந்திருப்பதற்காக விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதன் முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து அதனை அடைந்துள்ளது. இந்த வெற்றிக்காக நமது விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.

நமது தற்சார்பு இந்தியா பயணத்தில் இதுவொரு முக்கிய சாதனையாகும். #உள்ளூர் பொருட்கள் உலகளவில் செல்கிறது”

எம்.பிரபாகரன்

Leave a Reply