அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு !

அரசின் இ-சந்தை 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு வருடாந்திர கொள்முதல் செய்து சாதனை செய்திருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார். 57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“அரசின் இ-சந்தை @GeM_India ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்! முந்தைய ஆண்டுகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும். 57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply