மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள 10 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.28,204 கோடி!

2021-22-ல் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.28,204 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி அதிகபட்சமாக தமிழ்நாடு 7,054 கோடி ரூபாய் கூடுதல் கடன்தொகை பெறுவதற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.  

15-வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 0.5 சதவீதம் வரை கூடுதல் கடன் வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

திவாஹர்

Leave a Reply