புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் மகான் அரவிந்தர் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்தார். அரவிந்தரின் ஆசிரமத்துக்கு சென்ற அவர், அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை முடித்துக்கொண்டு காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்றார்.விழாவில் துணை நிலை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

எம்.பிரபாகரன்

Leave a Reply