தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேரோட்ட மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்ட இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதன் பிறகு மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, நிவாரண உதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.

மேலும், தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,உடல்நலம் குறித்து கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

கே.பி.சுகுமார்.,B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply