திண்டுக்கல் மாவட்டம். ஆடலுர் பன்றிமலை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை விரட்ட 2 கும்கி யானைகள்!-பாதுகாப்பு பணி தீவிரம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, கே சி பட்டி, அமைதி சோலை, தாண்டிக்குடி, சோலைக்காடு, பண்ணப்பட்டி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து பல வருடங்களாக யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து தென்னை வாழை போன்ற பயிர்களை சேதத்தை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது.

மேலும், யானை மிதித்து 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் கூட யானை மிதித்து விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வனப்பகுதியில் சுற்றி திரியும் யானை கூட்டத்தில் இருந்து ஒற்றை யானை மட்டும் தனியாக பிரிந்து ஆடலூர் பன்றி மலை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சுற்றித் திரிகிறது.

மேலும், வனப்பகுதியில் ஒட்டியுள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்து வருகிறது. இந்த ஒற்றை யானையை விரட்ட வனத்துறையினர் பல முயற்சி மேற்கொண்டும் இதுவரை காட்டுக்குள் விரட்ட முடியவில்லை இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அதேபோல் நேற்று 01.05.22 மேலும் சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கும்கி யானைகளும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் கோம்பை கிராமம் கன்னிமார் கோவில் அருகே முகாமிட்டு தங்க வைக்கப்பட்டுள்ளது. ஒற்றையானை வனப்பகுதியில் எங்கு உள்ளது என கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் யானை இருக்கும் இடம் தெரிந்தவுடன் இந்த இரண்டு கும்கி யானைகளும் அழைத்துச் செல்லப்பட்டு ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

தற்பொழுது யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சின்னத்தம்பி என்ற கும்கி யானையும் இதே வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. பின்னர் வனத்துறையினரால் பிடித்துச் சென்று தற்போது கும்கியாக மாற்றப்பட்டு முதல் முறையாக அழைத்து வரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply