திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டிற்கு வழங்கபட வேண்டிய நிதி உதவியை, கூடுதல் கையூட்டு கொடுத்தால் தான் வழங்குவேன் என்று அதிகாரி கொடுமைப்படுத்தியதால், விரக்தியடைந்த இளைஞர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், மணிகண்டன் குடும்பத்தை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார்.
மேலும், நல்ல திட்டங்களை ஊழல் ஏதுமின்றி மக்களுக்கே, நேரடியாக மத்திய அரசு வழங்கினால் அது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாக கூச்சலிடும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், மரணமடைந்த மணிகண்டனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேட்டு கொண்டார்.
கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com