கல்லூரி பேருந்து மோதியதில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி!

ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி., கம்பம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற 16 வயது சந்துரு என்ற பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தேனி மாவட்டம், தேவாரத்தைச் சேர்ந்தவர் சந்துரு (16). இவர் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள SUM என்ற தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக இன்று (16/05/2022) காலை தேவாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சந்துரு பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது உத்தமபாளையத்தில் இருந்து ராயப்பன்பட்டி செல்லும் வழியில் உள்ள புதிய பைபாஸ் சாலையைக் கடக்க முயன்ற போது, அச்சமயம் அந்த வழியாக அதிவேகமாக வந்த கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பேருந்து மாணவன் சந்துரு மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply