மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்ற குடும்பம்!-அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையிலே அமைந்துள்ளது இந்த திமுக ஆட்சி!- பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பெண்கள், பள்ளி மாணவிகள் குறிப்பாக பெண் காவலர்களுக்கே போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இரவில் ரோந்து பணியை கூட காவலர்கள் தனிமையில் மேற்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம். இப்படியாக, ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் பயத்துடன் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையிலே அமைந்துள்ளது இந்த திமுக ஆட்சி. தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு விரக்தியில் தீக்குளிக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது!முதலமைச்சர் கவனம் செலுத்தி அரசு இயந்திரத்தை இயங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply