சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்து இருந்தது. கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2020 டிசம்பர் 3-ல் பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கு சென்னைஉயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply