ஊராட்சி நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டி கேட்ட வாலிபர் வெட்டி படுகொலை! -ரெட்டியார் சத்திரம் அருகே நடந்த கொடூரம்.

வெட்டி படுகொலை செய்யப்பட்ட சிவா வயது 22.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள கதிரையன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் சிவா வயது 22. பாலிடெக்னிக் முடித்து, காவலர் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்

இந்நிலையில் 04.06.2022 அதிகாலை கதிரையன்குளத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெட்டியார் சத்திரம் போலீசார் சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஊருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று சில ஊடகங்களை அழைத்து அப்பகுதி குறைகளை கூறி உள்ளார். இதனால் சிவாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த 12 வது வார்டு உறுப்பினர் முத்துக்குமாருக்கும் மே 16 ந் தேதி எப்படி என் பகுதியில் உள்ள குறைகளை நீ கூறலாம் என்று கூறி இரு தரப்பினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ரெட்டியார்சத்திரம் போலீசார் 12 வது வார்டு உறுப்பினரை தாக்கிய வழக்கில் சிவா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரு தரப்பிற்கும் முன்பகை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 10 நாட்களாக அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று .வழக்கம்போல் ஊர் மத்தியில் உள்ள விநாயகர் கோவிலில் சக உறவினர்களுடன் படுத்து தூங்கி கொண்டிருந்த சிவாவை, வார்டு உறுப்பினர் முத்துக்குமாரின் தம்பி ரகுபதி, அண்ணனை அடித்து அசிங்கப்படுத்தி ஊரில் உள்ள அடிப்படை வசதிகளை வெளிப்படுத்தி அசிங்கப்படுத்திய சிவாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சில மர்ம நபர்கள் உடன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊருக்கு நல்லது செய்ய ஊரிலுள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தவிர திண்டுக்கல் மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் மேலும் 2 இடங்களில் கொலை சம்பவம் நடந்திருப்பது காவல் துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

டி.எஸ்.ஆர்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply