கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். இந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்குகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.

முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா,

ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவரிசையில் 2022ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை மாண்புமிகு கர்நாடக மேனாள் முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

2022-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:

அம்பேத்கர் சுடர் –
கர்நாடக மேனாள் முதல்வர் சித்தராமையா

பெரியார் ஒளி-
எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராஜதுரை

காமராசர் கதிர் விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்

அயோத்திதாசர் ஆதவன்-
மேனாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
செல்லப்பன்

காயிதேமில்லத் பிறை-
எஸ்.டி.பி.ஐ தலைவர்

தெகலான் பாகவி
செம்மொழி ஞாயிறு –
தொல்லியல் அறிஞர்
பேரா.கா.ராசன்

மார்க்ஸ் மாமணி
மறைந்த எழுத்தாளர்
ஜவஹர்

விசிக விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply